Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, March 5, 2013

    செயல்வழி கற்றல்: தமிழகத்தில் ம.பி குழு அதிகாரிகள் ஆய்வு

    தமிழகத்தின் செயல் வழி கற்றல் முறையை, மத்திய பிரதேசத்தில் அமல்படுத்த, அம்மாநில அதிகாரிகள் குழு, இரண்டாம் கட்டமாக ஆய்வு செய்து உள்ளனர்.
    மத்திய பிரதேசத்தில் கல்வித்துறையை மேம்படுத்த, செயல் வழி கற்றல்முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளனர். ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள செயல்வழி கற்றல் முறை குறித்து, ம.பி., அதிகாரிகள் குழு, முதல்கட்டமாக, ராமேஸ்வரம் பள்ளிகளில் ஆய்வு செய்து சென்றனர்.

    இரண்டாம் கட்டமாக, அம்மாநில பயிற்சித் துறை இயக்குனர் வினல் தலைமையில், அதிகாரிகள் விஷ்ணுபிரகாஷ், வினய் குல்கர்னி உள்ளிட்ட ஐந்து பேர், சென்னையில் உயர் அதிகாரிகளை சந்தித்து, திட்டங்கள் குறித்து கேட்டு அறிந்தனர்.

    பின், ராமேஸ்வரம், தனுஷ்கோடி பள்ளிகளில் ஆய்வு செய்தனர். "மாணவர்கள், செயல் வழி கற்றல் மூலம் எந்த அளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர்" என, கேள்விகள் கேட்டனர்.

    குழுவினர் கூறுகையில், "வாசிப்பு திறன், கணிதப் பாடங்களில், தமிழக மாணவர்கள் திறம்பட உள்ளனர். இத்திட்டத்தை விரைவில் மத்திய பிரதேசத்தில் துவங்க உள்ளோம்" என்றனர்.

    No comments: