Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, March 5, 2013

    இந்திய டாக்டர்கள் மீது தகுதி தேர்வில் பிரிட்டன் பாரபட்சம்

    பிரிட்டனில், டாக்டர்களுக்கான தகுதி தேர்வில், இந்தியர்கள் வேண்டுமென்றே தகுதியிழப்பு செய்யப்படுவதாக, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    பிரிட்டனில், டாக்டர்களுக்கு, சிறப்பு பயிற்சி மற்றும் சிகிச்சையளிக்க தேவையான தகுதிதேர்வு, நடத்தப்படுகிறது. இவற்றில் தேர்ச்சி பெறுபவர்கள், அந்நாட்டில், மருத்துவ பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்படுகின்றனர். அந்நாட்டில் உள்ள, ஜி.எம்.சி., எனப்படும் மருத்துவ கவுன்சில் மற்றும் ஆர்.சி.ஜி.பி., எனப்படும், பொது மருத்துவர்களுக்கான கல்லூரி ஆகியவை இந்த தேர்வுகளை நடத்துகின்றன. இவற்றில், ஆங்கில மொழி மற்றும் மருத்துவப்பணியில் ஈடுபட தேவையான அடிப்படை தகுதி, ஆகியவற்றில், டாக்டர்கள், தேர்வு பெற வேண்டும்.

    இந்நிலையில், டாக்டர்களை தேர்வு செய்யும் இந்த அமைப்புகள் மீது, இந்திய வம்சாவளி டாக்டர்களின் சங்கத்தை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது: தகுதி தேர்வுகளில், பிறநாட்டு டாக்டர்கள் குறிப்பாக இந்திய வம்சாவளியினர், அதிக அளவில் தோல்வி அடைகின்றனர். அதே சமயம், பிரிட்டனை சேர்ந்த டாக்டர்கள் இத்தேர்வுகளில், அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுகின்றனர். மூன்று ஆண்டுகள் நடத்தப்படும் பயிற்சியில், இந்திய டாக்டர்கள் சிறப்பாக பணிபுரிவதுடன், எந்த விதமான புகாரும் இன்றி, மூவாயிரம் நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சையும் அளிக்கின்றனர்.

    மேலும், பயிற்சியின் போது, பயிற்சியாளர்கள் மற்றும் சக டாக்டர்களிடம் இருந்து பாராட்டையும், இந்தியர்கள் பெறுகின்றனர். எனினும், தேர்வு முடிவுகள், இவர்கள் தோல்வி அடைந்ததாக காட்டுகின்றன. இம்முடிவுகள் மூலம், இந்தியர்கள் வேண்டுமென்றே தகுதியிழப்பு செய்யப்படுவதாக, சந்தேகம் எழுகிறது. இவ்வாறு மனுவில் இந்திய டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    No comments: