Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, March 14, 2013

    தலைமை ஆசிரியர் நியமனம் பிரச்னை டி.இ.இ.ஓ அலுவலகத்தை முற்றுகை

    தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பாக நேற்று முன்தினம் இரவு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட பொருளாளர் பழனிராஜ் ஆகியோர் தலைமையில் ஏராளமான ஆசிரிய, ஆசிரியைகள் திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது : நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நியமனம் செய்வதில் குளறுபடி நடந்துள்ளது. சீனியாரிட்டி இல்லாத ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முறையிட்டபோது சீனியாரிட்டியை கடைபிடிப்போம் எனக்கூறிவிட்டு தற்போது மாவட்ட தொடக்கக் கல்வி துறை இதனை மீறிவிட்டது. எனவே மாவட்டத் தொடக்கக்கல்வி துறை குளறுபடியை நீக்க வேண்டும் என்றனர். இப்போராட்டத்தால், நேற்று டி.இ.இ.ஓ அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    No comments: