Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, March 14, 2013

    பள்ளி வயது குழந்தைகளை கட்டாயம் பள்ளியில் சேர்க்க வேண்டும் கலெக்டர் பேச்சு

    பள்ளி வயது குழந்தைகளை கட் டாயம் பள்ளியில் சேர்க்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கரன் பேசினார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த குளமங்கலம் ஊராட்சியில் குளமங்கலம், பொன்னாப்பூர் கிழக்கு, மேற்கு, சின்ன பொன்னாப்பூர், நெய் வாசல், அரசப்பட்டு ஆகிய ஊராட்சிகள் பயனடையும் வகையில் மக்கள் நேர் காணல் முகாம் கலெக்டர் பாஸ்கரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
    இதில் செய்தி, வேளாண், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறை கள் மூலம் அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்கும் வகையில் சிறு கண்காட்சிகள் நடத்தப்பட்டன. கலெக்டர் பாஸ்கரனிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 459 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
    மனுக்களை பெற்ற கலெக்டர் பாஸ்கரன் பேசுகையில், ‘மக்கள் நலன் காப்பதற்காக அரசு பல் வேறு நலத்திட்ட உதவி களை செய்து வருகிறது. குறிப்பாக கல்வித்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் அதிக நிதி ஒதுக்கி அனைவரும் கல்வி கற்க வேண்டும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. அரசின் நோக்கம் நிறைவேற ஒவ்வொருவரும் தங்களது பள்ளி வயது குழந்தைகளை கட்டாயம் கல்வி கற்கச்செய்ய வேண் டும். குழந்தைகளுக்கு கல்வி மிக அவசியம்‘ என்றார்.

    No comments: