Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, March 5, 2013

    ஆங்கிலத்தில் அசத்தும் அரசுப் பள்ளி

    பள்ளிகளில் கற்பித்தல் மட்டுமல்லாமல், பழகும் முறைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தால், மாணவர்களின் திறமைகள் மிளிரும் என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறது ஒரு தனியார் அமைப்பின் ஆய்வு.
    "கல்வி முறையில் மாற்றம் தேவை":
    கல்வி கற்பிக்கும் முறையை மாற்றினால் எந்தக் குழந்தையும் கல்வியில் சிறந்து விளங்க வைக்க முடியும் என நிரூபித்திருக்கிறது டீச் ஃபார் இந்தியா அமைப்பு. கற்பித்தலில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த ஆய்வுக்காக கடந்த 8 மாதங்களாக சென்னையில் உள்ள 7 மாநகராட்சிப் பள்ளிகளில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் முடிவை மாநகராட்சி அதிகாரிகள், கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் ஊடகங்களுக்கு எடுத்துக் காட்டும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. டீச் ஃபார் இந்தியா அமைப்பின் மூலம், கற்றுக் கொண்டதை இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் உற்சாகமாக வெளிப்படுத்தினர்.

    ஆங்கிலத்தில் அசத்தும் அரசுப் பள்ளி:
    டீச் ஃபார் இந்தியா அமைப்பின் வகுப்புகள் 7 மாநகராட்சி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு வகுப்பின் மூலம் திறமையை வெளிப்படுத்துவது, ஒழுக்கம், கீழ்படிதல் ஆகியவற்றில் மாணவர்கள் சிறந்து விளங்குவதாக தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த மாணவர்களிடம் தமிழில் கேள்வி கேட்டால் கூட ஆங்கிலத்தில்தான் பதில் கிடைக்கிறது. சரியோ, தவறோ ஆங்கிலத்தை பேசத் தொடங்கும்போதுதான் அதனை பழக முடியும் என்பதால் மாணவர்களை அவ்வாறு ஊக்குவிப்பதாக டீச் ஃபார் இந்தியா ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கணக்கு, அறிவியல் போன்ற பாடங்களை கற்பிப்பதிலும் வித்தியாசமான முறைகளைப் பின்பற்றுவதால் மாணவர்களிடம் நல்ல மாற்றங்களை காண முடிகிறது.

    அரசுப் பள்ளியை விரும்பும் பெற்றோர்:
    கற்பித்தல் முறையில் மட்டுமல்லாமல், மாணவர்களிடம் பழகும் அணுகுமுறையிலும் கடைப்பிடிக்கப்பட்ட புதிய உத்திகளால், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் திறமைகள் வெளிப்படுகின்றன. இந்த இனிய மாற்றங்களின் விளைவாக, சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக இந்த வருடம் ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா என்பதே தற்போதைய கேள்வி.

    No comments: