பிளஸ் 2, தமிழ் முதற்தாள் கேள்வித்தாள், ரிப்பீட் ஆனது போல், இரண்டாம் தாள் கேள்வித்தாளும் இருக்கும் என, எதிர்பார்த்து, மாணவ, மாணவியர் ஏமாற்றம் அடைந்தனர்.
கடந்த, 1ம் தேதி, தமிழ் முதற்தாள் தேர்வு நடந்தது. இதில், மொத்தம், 50 கேள்விகளில், 28 கேள்விகள், அப்படியே, கடந்த ஆண்டு மார்ச் தேர்வு கேள்வித்தாளில் இருந்து கேட்கப்பட்டன; கேள்வி எண் கூட மாறவில்லை. 100க்கு, 63 மதிப்பெண்களுக்கு, கடந்த ஆண்டு கேள்விகளே கேட்கப்பட்டதால், மாணவ, மாணவியர், மிக எளிதாக தேர்வை எழுதினர். இதை, தமிழ் ஆசிரியர்களும் ஒப்புக் கொண்டனர்.
இந்நிலையில், நேற்று, தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. கடந்த ஆண்டு கேள்விகளே மீண்டும் இடம் பெற்றிருக்கும் என, மாணவ, மாணவியர் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்றைய கேள்வித் தாளில், பழைய கேள்விகள் எதுவும் இடம் பெறாததால், மாணவர் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழ் ஆசிரியர் ஒருவர், இதுகுறித்து கூறும் போது, "இரண்டாம் தாள் கேள்வித்தாளில், கடந்த ஆண்டு கேள்விகள் எதுவும் மீண்டும் இடம்பெறவில்லை. அதேபோல், பாடத்திட்டத்திற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளோ, கடினமான கேள்விகளோ எதுவும் இடம்பெறவில்லை" என்றார்.
இந்நிலையில், நேற்று, தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. கடந்த ஆண்டு கேள்விகளே மீண்டும் இடம் பெற்றிருக்கும் என, மாணவ, மாணவியர் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்றைய கேள்வித் தாளில், பழைய கேள்விகள் எதுவும் இடம் பெறாததால், மாணவர் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழ் ஆசிரியர் ஒருவர், இதுகுறித்து கூறும் போது, "இரண்டாம் தாள் கேள்வித்தாளில், கடந்த ஆண்டு கேள்விகள் எதுவும் மீண்டும் இடம்பெறவில்லை. அதேபோல், பாடத்திட்டத்திற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளோ, கடினமான கேள்விகளோ எதுவும் இடம்பெறவில்லை" என்றார்.
No comments:
Post a Comment