Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, March 16, 2013

    திருந்தவே திருந்தாத ஜென்மங்கள்! - நாளிதழ் செய்தி

    பள்ளி மாணவியரிடம், ஆசிரியர் ஆபாசமாக பேசி வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
    திருவண்ணாமலை, அவல்கார தெருவில், அமராவதி முருகையன் நகராட்சி மகளிர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவியரிடம், அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசுவதாக, மாணவியர், தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். பெற்றோர், ஒரு மாதத்துக்கு முன், பள்ளிக்கு சென்று, பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். எனினும், ஆசிரியர் தொல்லை நிற்கவில்லை. அதிர்ச்சியடைந்த மாணவியர் அனைவரும் ஒன்று கூடி, திருவண்ணாமலை கலெக்டர் விஜய்பிங்ளேவுக்கு புகார் மனு அனுப்பினர்.

    புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் எங்களிடம் தேவையில்லாமல் ஆபாசமாக பேசுகிறார்; உடம்பு சரியில்லை எனச் சொன்னால், உடம்பின் மேல் கை வைத்து பார்க்கிறார்; திருமணம் குறித்து பேசுவார்; குடிகாரர்களைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என, கூறுகிறார். பாடம் நடத்துவது கிடையாது; ஆனால், பாடங்களில் இல்லாத பல விஷயங்களைத்தான் நடத்துவார்;

    திடீரென எங்களை அருகே வருமாறு கூறுவார்; நாங்கள் செல்லாவிட்டால், அவரே எங்கள் அருகில் வந்து நிற்பார்; எங்களிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த, கலெக்டர் விஜய்பிங்ளே, முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார். முதன்மை கல்வி அலுவலர் அருண்பிரசாத், நேற்று முன்தினம், பள்ளிக்கு நேரில் சென்று மாணவியரிடம் விசாரணை நடத்தினார்.

    மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை, கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    No comments: