Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, March 16, 2013

    குளறுபடிகள் நிறைந்த வணிகவியல் தேர்வு - நாளிதழ் செய்தி

    தமிழகம் முழுவதும் நடந்த வணிகவியல் தேர்வு வினாத்தாளில், பல இடங்களில் எழுத்து பிழைகள் இருந்தன.
    விடைகளை தேர்ந்தெடுக்க வேண்டிய வினாக்களில், நான்கு விடைகளுக்கு பதில், மூன்று விடைகள் மட்டும் இடம் பெற்றிருந்தன. இது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
    நேற்று நடந்த வணிகவியல் தேர்வு வினாத்தாளில், ஏராளமான எழுத்து பிழைகள் இருந்தன. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும் வினாக்களில், "அ" பிரிவில், 20 வினாக்கள் இடம் பெற்றிருந்தன. இதில் நான்காவது வினாக்கான விடையில், "சிற்றளவு வியாபாரம்&' என்பதற்கு பதிலாக, "சிற்றளவு வியாராரம்" என்றும், ஏழாவது வினாக்கான இரண்டாவது விடையில், "விருப்பத்தின் பேரில்&' என்பதற்கு பதிலாக, "வருப்பத்தின் பேரில்" என, அச்சடிக்கப்படிருந்தது.
    விடைகள் குறைவு: மேலும், 18வது வினாவில், மூன்றாவது விடையாக "கூட்டுறவு சங்கங்கள்" என்பதற்கு பதிலாக, "கூட்டறவு சங்கங்கள்" என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. தேர்ந்தெடுத்து விடை எழுதும் பகுதியில், ஒவ்வொரு வினாக்களுக்கும், நான்கு விடைகள் தரப்பட்டிருக்கும். ஆனால், வினா எண் 4, 5, 7, 9, 10 ஆகியவற்றுக்கு, மூன்று விடைகள் மட்டுமே தரப்பட்டிருந்தன.
    பகுதி, "அ" வின் மற்றொரு பிரிவான, கோடிட்ட இடத்தை நிரப்புதல் பகுதியில், 20 வினாக்கள் உள்ளன. வினா எண் 29ல், "முன்னுரிமை பங்குகள்" என்பதற்கு பதிலாக, "முன்றுரிமை பங்குகள்&' என அச்சடிக்கப்பட்டிருக்கிறது. "ஆ" பகுதிக்கான வினா தொகுப்பில், வினா எண் 47ல், "நீடித்த வாழ்வு என்றால் நீவீர் அறிவது யாது?&' என்பதற்கு பதிலாக, "நீடித்த வாழ்வு என்றார் நீவீர் அறிவது யாது?" என்று அச்சடிக்கப்பட்டிருந்தது.
    தேர்வு எழுதிய மதுராந்தகம் மாணவர்கள் கூறியதாவது: வினாத்தாளில் கொடுக்கப்பட்டிருந்த மூன்று விடைகளில் சரியான விடை தவறாக அச்சடிக்கப்பட்டிருந்தன. இதனால் நாங்கள் குழப்பத்திற்கு ஆளானோம். சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும் பகுதியில், நான்கு விடைகள் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஐந்து வினாக்களுக்கு மூன்று விடைகள் மட்டுமே கொடுத்துள்ளனர். எனவே, தமிழக அரசு அந்த வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    No comments: