ஜாக்டோ மாநிலஉயர்மட்டக்குழு கூட்டம் 30.08.2015 காலை 10 மணியளவில் திருச்சியில் திருச்சி சேவா சங்க மகளிர்மேல்நிலைப்பள்ளியில் கூடியது.கூட்டத்திற்கு சுழற்சி முறையில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் பாவலர் திருமிகு.மீனாட்சி சுந்தரம் அவர்களும்,தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுசெயலர்.திருமிகு எத்திராஜ் அவர்களும் கூட்டுத் தலைமை யேற்று நடத்தினர்.
ஜாக்டோவில் உள்ள 24 சங்கங்களில் 19 சங்கம் சார்ந்த மாநில பொறுப்பாளர்கள் வருகை தந்து ஒருமித்த கருத்துகள் எடுத்தனர்.இக்கூட்டத்தில் நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பொதுச்செயலர்(பொறுப்பு)திரு.க.செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டார்.
கூட்ட முடிவுகள்
ஜாக்டோவின் 15 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அக்டோபர் 8 ம் தேதியன்று அனைத்துபள்ளிகளையும் மூடி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில்ஈடுபடுவது என்றும் அதில் அனைத்து ஆசிரியர்களையும் பங்கேற்க செய்வது என்றும் முடிவாற்றியது
மேலும் அன்றைய தினம் காலை 11.00 மணிக்கு மாவட்டத்தலைநகரில்,ஆட்சியர் அலுவலகம் முன்பு,அல்லது மாவட்ட ஜாக்டோ முடிவெடுக்கும் இடத்தின் முன்பு திரளான ஆசிரியர்கள் அனைவரும் கூடிஒருமணி நேரம் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் நடத்துவது என்றும் முடிவாற்றியது.
இது சார்பாக மாவட்டதலைநகரில் ஏற்கனவே செயலாற்றி வருகின்ற மாவட்டஜாக்டோ தொடர்பாளர்கள் தலைமையில் 20.09.2015 ஞாயிறு அன்று ஆயத்தக்கூட்டம் கூட்டுவது என்றும் அதில் அனைத்து இயக்கம் சார்ந்த,மாநில, ,மாவட்ட வட்டம் மற்றும் ,வட்டார /நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு ஒருநாள் வேலை நிறுத்தம் வெற்றிபெற ஆக்கபூர்வமான திட்டங்களை வகுக்க வேண்டுமெனவும் முடிவாற்றியது.
20.09.2015 முன்பாக மாவட்ட ஜாக்டோ உயர்மட்டக்குழு க்கூட்டம் மாவட்ட ஜாக்டோ தொடர்பாளர்கள் மூலம் கூட்டப்பட்டு,அதில் மாநில ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஜாக்டோவின் உயர்மட்டக்குழுக்கூட்டமுடிவுகள் பற்றிய விளக்க உரை நிகழ்த்திஆயத்தப்படுத்துவது எனவும் முடிவாற்றப்பட்டது
அக்டோபர்-8 அடையாள வேலை நிறுத்தபோராட்டத்திற்கான சுவரொட்டிகள் மாநில ஜாக்டோ அமைப்பின் மூலமாக அச்சிட்டுவழங்குவது என்றும்,துண்டறிக்கைகள் மாநில அமைப்பின் வழிகாட்டுதலின் அடிப்படையில்.மாவட்ட ஜாக்டோஅமைப்பு அச்சிட்டு ஆசிரியர்களிடம் வழங்குவதுஎனவும் முடிவாற்றப்பட்டது.
ஆசிரியர்கள் அனைவரும் ஜாக்டோவின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பொதுச்செயலர்(பொறுப்பு)திரு.க.செல்வராஜ் அவர்கள் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment