Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 28, 2015

    அரசு பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

    கடந்த, 4 ஆண்டுகளில், அரசு பள்ளிகளில், 72 ஆயிரத்து, 843 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது, என, அமைச்சர் வீரமணி கூறினார்.


    வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, பொன்னேரி, வக்கனம்பட்டி, புதுப்பேட்டை, ஜெயபுரம், வெலக்கல்நத்தம் பள்ளிகளைச் சேர்ந்த, 1,141 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கும் விழா, ஜோலார்பேட்டையில் நேற்று நடந்தது. திருப்பத்தூர் எம்.எல்.ஏ., ரமேஷ் தலைமை வகித்தார். அமைச்சர் வீரமணி, மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கி பேசியதாவது: கடந்த, 4 ஆண்டுகளில் கல்விக்காக, முதல்வர் ஜெயலலிதா, 85 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். 72 ஆயிரத்தி 843 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. 

    கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில், 113 பள்ளிகளிலும், இந்தாண்டு, 165 பள்ளிகளிலும், 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். எஸ்.எல்.எல்.ஸி., தேர்வில் கடந்தாண்டு, 883 பள்ளிகளிலும், இந்தாண்டு, 1,163 பள்ளிகளிலும், 100 சதவீதம், மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார்.

    No comments: