Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, September 23, 2015

    சுற்றுலா படிப்பு படித்தவர்களுக்கு காத்திருக்கிறது அரசு வேலை: 94 சுற்றுலா அதிகாரிகள் போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம்; விரைவில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

    தமிழக அரசுப் பணியில் 94 சுற்றுலா அதிகாரிகள் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடுகிறது. தமிழக அரசின் சுற்றுலா துறையில் இதுவரையில் சுற் றுலா அதிகாரிகளும், உதவி சுற்றுலா அதிகாரிகளும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில்தான் நியமிக்கப் பட்டு வந்தனர். தற்போது முதல் முறையாக டிஎன்பிஎஸ்சி போட் டித் தேர்வு மூலம் தேர்வு செய் யப்பட உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன் பிஎஸ்சி) தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் ‘தி இந்து’ நிருபரிடம் நேற்று கூறியதாவது:


    சுற்றுலா அதிகாரி பதவியில் 24 காலியிடங்களும், உதவி சுற்றுலா அதிகாரி பணியில் 70 காலியிடங்களும் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. சுற்றுலா அதிகாரி பணிக்கு சுற்றுலா மற்றும் பயண மேலாண்மையில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை படிப்பில் சுற்றுலா பாடத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு முதுகலை பட்டத்துடன் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மையில் டிப்ளமா பெற்றிருக்க வேண்டும்.

    இதேபோல், உதவி சுற்றுலா அதிகாரி பணிக்கு சுற்றுலா மற்றும் பயண மேலாண்மையில் பட்டம் அல்லது ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மையில் டிப்ளமா முடித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மூலமாக இப்பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

    இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.

    சுற்றுலா அதிகாரி பணியிடங் கள் இதுவரையில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியா ரிட்டி) அடிப்படையில்தான் நிரப் பப்பட்டு வந்தன. தற்போதுதான் முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    உயர் நீதிமன்றத்தில்..

    இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியின் நேர்முக உதவியாளர் (32 காலியிடம்), உதவி பிரிவு அதிகாரி (25 இடங்கள்) மற்றும் உதவியாளர், துணை பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த காலியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படுமா? அல்லது உயர் நீதிமன்றம் மூலமாக நிரப்பப்படுமா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    No comments: