ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். உலகில் இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐ.நா., சார்பில் செப்., 8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
எழுத்தறிவு மற்றும் நீடித்த சமூகம் என்பது இந்தாண்டு மையக்கருத்து. ஒரு நாட்டின் எழுத்தறிவு சதவீதத்தை பொறுத்தே அந்நாட்டின் சமூக வளர்ச்சி அமைகிறது. ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். இது ஒருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும்.
எழுத்தறிவு மூலம், அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். உலகளவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கையில், 75.7 கோடி பேர் எழுத்தறிவு இல்லாதவவர்களாக உள்ளனர். எழுத்தறிவு பெறாதவர்களில் மூன்றில் 2 பங்கு பேர் பெண்கள். பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும். இந்தியாவின் நிலைகடந்த 2011ன் படி, இந்தியாவின் எழுத்தறிவு, 74 சதவீதமாக உள்ளது.
இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம். இது 2001 கணக்கெடுப்பை விட 9.2 சதவீதம் அதிகம். தமிழக எழுத்தறிவு சதவீதம், 80.4 சதவீதமாக உள்ளது. இது 2001ஐ விட 6.9 சதவீதம் அதிகம். 100 சதவீத எழுத்தறிவு என்பதை நோக்கி நாம் முன்னேற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
1 comment:
வி.ஏ.ஓ ( VAO) தேர்வில் 25க்கு 25 மதிப்பெண் முழுமையாக பெற ஸ்ரிராம் கோச்சிங் சென்டரின் வி.ஏ.ஓ கைடு..
பாடத்திட்டம் பின்வருமாறு:
1. கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணிநியமன விதிகள், பணிகள் மற்றும் கடமைகள்
2. அ.பதிவேடு, பட்டா, சிட்டா, அடங்கல்
3. நிலஅளவை, நிலவரித்திட்டம்,
4. நிலவரிவசூல்
வருவாய்பதிவு மாற்றங்கள் முறைகள், நிலஉரிமையை விட்டுக்கொடுத்தல்
5.நிலச் சீர்திருத்தம்
குடிவாராச் சட்டங்கள்
6. வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி), இனாம்கள்
7. நிலக்குத்தகை, நிலஒப்படை மற்றும் வீட்டுமனை ஒப்படை.
8. புதையல்.
9. கிராமநிர்வாக அலுவலரின் முக்கியப் பணிகள்.
10. விபத்து நிவாரணத் திட்டம்.
11. சாவடிகளைப் பராமரித்தல்.
12. நிலமாற்றம்
நிலஎடுப்பு
13. பாசன ஆதாரங்கள் தண்ணீர் தீர்வை முறைகள்
14.பேரிடர் மேலாண்மை,
15. நிவாரணப் பணிகள்,
16.அரசு நிலங்களில் ஆக்ரமணங்களை அகற்றும் நடைமுறைகள்
இருப்புப் பாதைகள்
17. கொலை, தற்கொலை, அசாதாரணமரணம் நிகழும்போது கிராமநிர்வாக அலுவலர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
18. பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்
19.ஓய்வூதியத் திட்டங்கள்
20.தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்
21. விழாக்கள் மற்றும் பொது அரசுவிழாக்களின் போது
22.சான்றுகள் வழங்குவதில் கிராமநிர்வாக அலுவலரின் கடமைகள்
23.வனப்பகுதி மற்றும் ஆதாரங்களை பாதுகாப்பதன் முக்கியக் கூறுகள்
24.கால்நடைப்பட்டி
25. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
இந்த புக்கின் கூரியர் விலை உட்பட 400ரூபாய் மட்டும்... ஸ்டாக் உள்ளவரை மட்டுமே
தொடர்புக்கு
நிறுவனர் 86789 13626 ..
Post a Comment