Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 7, 2015

    எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான இறுதி கலந்தாய்வு எப்போது?

    அகில இந்திய ஒதுக்கீடு போக, காலியிடங்கள் நிலவரம் தெரிய வேண்டியுள்ளதால், எம்.பி.பி.எஸ்.,- பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, இறுதி கட்ட கலந்தாய்வு, வரும், 20ம் தேதிக்கு பிறகே நடக்க உள்ளது.


    தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகளும், ஒரு, பல் மருத்துவக் கல்லுாரியும் உள்ளன. இதில், 2,655 இடங்கள், 100 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்குச் சென்றன. மீத இடங்களுக்கு, இரண்டு கட்ட கலந்தாய்வு நடந்தது.


    இதில், அனைத்து இடங்களும் நிரம்பின; செப்., 1 முதல் வகுப்புகள் துவங்கி விட்டன. அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் பெற்ற மாணவர்கள், கல்லுாரியில் சேர, இம்மாதம், 15ம் தேதி கடைசி நாள். இதில், ஏற்படும் காலியிடங்கள், மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்பி விடும். இந்த இடங்கள் குறித்த விவரங்கள் கிடைத்து, இம்மாதம், 20ம் தேதிக்கு பிறகே, இறுதி கட்ட கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளது என, மருத்துவக்கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.


    கூடுதல் இடம்: 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில், இடம் கிடைக்காத பொதுப்பிரிவு மாணவர்கள் எட்டு பேர், சுப்ரீம் கோர்ட் வரை சென்று, அரசு கல்லுாரிகளில் கூடுதலாக உருவாக்கப்படும் இடங்களில், சேரும் உத்தரவை பெற்றுள்ளனர். அதனால், பொதுப்பிரிவில், 27 மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்., இடம் தர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    No comments: