Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, September 4, 2015

    அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோரி வழக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.

    தமிழ்நாடு பார்வையற்றோர் ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.சொக்கலிங்கம்,ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், மாற்றுத்திறனாளிகள் சமவாய்ப்பு,உரிமை மற்றும் முழு பங்களிப்பு சட்டத்தின்படி, அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும்போதும், பதவி உயர்வு வழங்கும்போதும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதஇடஒதுக்கீடு வழங்க வேண்டும். 


    இந்த சட்ட விதிகளை ஏற்று சுப்ரீம் கோர்ட்டும் கடந்த 2013–ம் ஆண்டு அக்டோபர் 8–ந் தேதி தீர்ப்பு அளித்துள்ளது. அதில், ‘ஏ’ முதல் ‘டி’ பிரிவு வரையிலான பணிகளுக்கு இந்த 3 சதவீத இடஒதுக்கீடுவழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர், அரசு கல்லூரிகளுக்கு முதல்வர் ஆகிய பதவிகளுக்கு கடந்த ஆகஸ்டு 14–ந் தேதி முதல் கவுன்சிலிங் நடவடிக்கை நடந்து வருகிறது.
    இந்த பதவி உயர்வில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோருக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்து, மனுவுக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். மனுதாரர் சார்பில் கோவி ராமலிங்கம் ஆஜரானார்.

    No comments: