Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, September 10, 2015

    மாணவனை அடித்து நொறுக்கிய ஆசிரியர் - தினமலர்

    கர்நாடகாவில் பான்ட்வாலா என்ற பகுதியில் வேத பாடசாலையில் வீட்டுப்பாடம் எழுதி வராததால் மாணவனை ஆசிரியர் அடித்து துன்புறுத்திய சம்பவம் வீடியோவாக வேகமாக பரவியுள்ளது.

    கர்நாடகா மாநிலம் மங்களூர் அருகே உள்ள வேத பாடம் கற்றுத்தரும் பள்ளியின் ஆசிரியர் சோமசுந்தர சாஸ்திரி என்பவர், வலதுகையில் கட்டுடன் வந்த மாணவனை அடித்து துன்புறுத்தினார்.

    இது தொடர்பான அந்த வீடியோவில், மாணவன் தனது வலது கையில் ஏற்கனவே காயம் காரணமாக கட்டு போட்டுள்ளான். அதனையும் பொருட்படுத்தாமல் அந்த மாணவனை ஆசிரியர் அடித்து துன்புறுத்தி காதை திருகி, அவனது இடதுகையை முறித்து அவனை துன்புறுத்துகிறார். 

    வலி தாங்காமல் அந்த மாணவன் அலறுகிறான். அந்த வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆசிரியரின் இந்த கொடூர செயலை குழந்தைகள் உரிமை அமைப்பினர் போலீசிலும் புகார் கூறப்பட்டுள்ளது.

    No comments: