திருக்கழுக்குன்றம் அருகே உள்ள ஆலமரக்குப்பம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் 4–ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அதே ஆசிரியர் கடந்த 2 நாட்களாக பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் 20–க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் திருக்கழுக்குன்றம் போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சு நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
சில்மிஷ புகாரில் சிக்கிய ஆசிரியர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1 comment:
IF it is true
GOVERNMENT must dismiss him.
DONT forgive this type of men's.
Post a Comment