Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, April 24, 2014

    தொழிலாளர்கள், ஊழியர்கள் வாக்களிக்க வசதியாக இன்று ஒருநாள் விடுமுறை: தொழிலாளர் ஆணையர் உத்தரவு

    தொழிலாளர்கள், ஊழியர்கள் வாக்களிக்க ஏதுவாக இன்று  ஒருநாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று  தொழிலாளர் நலத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து  தொழிலா ளர் நலத்துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் ஆலந்தூர்  சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
     தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி தமிழகத்தில்  உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள்  (தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உட்பட), உணவு நிறுவனங்கள்,  திரையரங்குகள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார்  போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள்  ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் (தினக்கூலி,  தற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள் உட்பட) தேர்தல் நாளான இன்று  வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு  வழங்கப்பட வேண்டும். 

    ஏற்கனவே இத்தகவல் ஊடகங்கள் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில அமைப்புகள் விடுமுறை அளிக்காமல் அனுமதி மட்டும்  அளிப்பதாக தொழிலாளர் துறைக்கு புகார் வந்துள்ளது. ஆகையால்,  மேற்கூறிய அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள்  தங்களுடைய தொழிலாளர்களுக்கு இன்று கட்டாயமாக விடுமுறை  அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    No comments: