Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, April 25, 2014

    10ம் வகுப்பு விடைத்தாள் நகல் வழங்கப்படுமா?

    பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவது போல், பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கும் விடைத்தாள் நகல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைவாக பெறும் மாணவர்களில் சிலர், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கோரி விண்ணப்பிப்பது வழக்கம்.
    பிளஸ் 2 விடைத்தாள் நகல்களை தங்கள் வசம் பத்திரப்படுத்தும் நோக்கத்தில், ஆண்டுதோறும் பல ஆயிரம் மாணவர்கள், அரசு தேர்வுகள் இயக்கத்துக்கு விண்ணப்பித்து, அவற்றை பெறுகின்றனர். தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விடைத்தாள் நகல்களை காட்டி மகிழ்ச்சி அடைகின்றனர்.பத்தாம் வகுப்பு மாணவர்கள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இவர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கவும், விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யவும், அரசு தேர்வுகள் இயக்ககம், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,"பள்ளி வாழ்க்கையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு, முக்கிய திருப்புமுனையாக அமைகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதுபோல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்குவதில் சிரமம் ஏதுமில்லை. கல்வித்துறை அதிகாரிகள் பரிந்துரைத்தால், அரசு தரப்பில் அனுமதிக்க வாய்ப்புள்ளது,' என்றார்.

    No comments: