Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, March 13, 2013

    UPSC, TNPSC மற்றும் TET உள்ளிட்ட தேர்வுகளில், திறந்தநிலை பல்கலையில் படித்தவர்கள் அதிகளவில் அரசு பணிகளுக்கு தேர்வு

    யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., டி.இ.டி., உள்ளிட்ட தேர்வுகளில், திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தோர் அதிகளவில் தேர்வாகி உள்ளனர்" என, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின், 6வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. துணைவேந்தர் சந்திர காந்தா, வரவேற்புரையாற்றினார். கவர்னர் ரோசய்யா, தலைமை தாங்கினார்.

    விழாவில், 35,432 பேருக்கு இளங்கலை பட்டமும்; 6,176 பேருக்கு முதுகலை பட்டமும்; 377 பேருக்கு, எம்.பில்., பட்டமும்; 5,937 பேருக்கு பட்டய சான்றிதழும்; 198 பேருக்கு முதுகலை பட்டய சான்றிதழும் வழங்கப்பட்டன.

    உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது: வெளிநாடுகளில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படிப்பது, பெருமையாக கருதப்படுகிறது. பிரிட்டிஷ் திறந்தநிலை பல்கலைக்கழகம் உலகப் புகழ் பெற்றது.

    பட்டமளிப்பு விழாவில், பொதுவாக, ஒரே வயதினரை மட்டுமே பார்க்க முடியும். ஆனால், இங்கு இளைஞர்கள், நடுத்தர மற்றும் முதியவர்கள் என, அனைவரையும் காண முடிகிறது. வாழ்நாள் முழுவதும் ஒருவர் கற்பதற்கான வாய்ப்பை, திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்குகிறது.

    திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் படித்த பலர், யு.பி.எஸ்.சி., - டி.என்.பி.எஸ்.சி., - டி.இ.டி., தேர்வாகி உள்ளனர். இவ்வாறு பழனியப்பன் கூறினார்.

    பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா கூறுகையில், "மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பல்நோக்கு பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இணையவழி மாணவர் சேர்க்கை மற்றும் குறுஞ்செய்தி முறையில், தகவல் பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது" என்றார்.

    No comments: