மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. விளையாட்டு அலுவலர் முருகன் தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வித்திட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதா, சமூக நலத்துறை அதிகாரி ஆனந்தவள்ளி முன்னிலை வகித்தனர்.
போட்டிகளை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மண்டல மேலாளர் துரைசிங் துவக்கி வைத்தார். தடகளத்தில் 30வயதிற்கு மேற்பட்ட பிரிவில் 3000மீ நடைப்போட்டியில் ராமு, 100மீ ஓட்டத்தில் பவுசியாபானு, குண்டு எறிதலில் ஷோபனாகுமார், நீளம் தாண்டுதலில் நிர்மலாதேவி முதலிடம் பெற்றனர். 40வயதிற்கு மேற்பட்ட பிரிவில் செஸ் போட்டியில் மீனாட்சி, கோலத்தில் ஏசுத்தாய், டென்னிகாய்ட்டில் புளோரா-சகுந்தலா ஜோடி, கேரத்தில் லீலாஜேக்கப், நீளம் தாண்டுதலில் தவமணிதேவி, 1500மீ நடையில் சகுந்தலா, 100மீ குண்டு எறிதலில் புளோரா முதலிடம் பெற்றனர். 50வயதிற்கு மேற்பட்ட பிரிவில் 200மீ நடைப்போட்டியில் ராதா, நீளம் தாண்டுதலில் பாரதிநல்லம்மாள், குண்டு எறிதலில் ஐயம்மாள் முதலிடம் பெற்றனர்.
No comments:
Post a Comment