Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, March 16, 2013

    கலையாசிரியர்கள் தொகுப்பூதியம் உயர்வு

    தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றங்களின் கலையாசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கான தொகுப்பூதியத்தினை உயர்த்திட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
    தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றங்களின் மூலம் 5 முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு சென்னையில் 16 வகையான கலைகள், மாவட்டங்களில் 4 வகையான கலைகள் என மொத்தம் 20 வகையான கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

    இந்த சவகர் மன்றங்களில் கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் பணியாற்றியவர்களுக்கு ஊதிய உயர்வினை வழங்க கூடுதலாக 26 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    சென்னை சவகர் மன்ற கலையாசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 1500 ரூபாயிலிருந்து, 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் மாவட்டப்பகுதிகளில் உள்ள கலையாசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 300 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    ஊரக மைய ஆசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கான ஊதியம் 150 ரூபாயிலிருந்து, 1000 ரூபாயாக ஆறு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 34 கலையாசிரியர்கள், 4 ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்டங்களில் 136 கலையாசிரியர்கள் 35 திட்ட அலுவலர்கள் என மொத்தம் 209 பேர் பயன்பெறுகிறார்கள்.

    No comments: