Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 4, 2013

    அரசு கல்லூரி விடுதியில் சூரிய மின்சக்தி விளக்கு வசதி

     தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி விடுதிகளுக்கு சூரிய ஒளி மின்விளக்கு வசதி ஏற்படுத்த ஆறு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
    மின்வெட்டு பிரச்னையால், தொழில் துறையினர் மட்டுமின்றி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பிரச்னையை உணர்ந்த தமிழக அரசு, அரசு கல்லூரி விடுதிகளில் சூரிய ஒளி மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படும்; தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளித்தது. அப்பணிக்காக 60 கோடி ரூபாயும் ஒதுக்கியது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பிற்படுத்தப்பட்டோர், சமூக நலத்துறை விடுதிகளில் உள்ள மின்சார வசதி, மாணவர்கள் எண்ணிக்கை, அறைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, உடுமலை அரசு கலை கல்லூரி விடுதிகளில் சூரிய ஒளி மின்வசதி ஏற்படுத்த தலா மூன்று லட்சம் வீதம் ஆறு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கல்லூரி பேராசிரியர்கள் கூறுகையில்,"சூரிய ஒளி மின்சாரம் பெறுவதற்கான கட்டமைப்பு, அரசு கல்லூரி விடுதிகளில் ஏற்படுத்தப்பட உள்ளன. எட்டு முதல் 15 விளக்குகள் அமைக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணிகள் நடந்து வருகின்றன" என்றனர்.

    கடந்த 2012 துவக்கத்தில், அரசு மருத்துவமனைகளில் சூரிய ஒளி மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்படும். அதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பொதுப்பணித்துறை, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

    ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சூரிய ஒளி மின் விளக்குகள் இன்னும் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments: