பிகாரில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
தலைநகர் பாட்னாவில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 2 போலீஸ் ஜீப்புகள் எரிக்கப்பட்டன. பஸ்கள், கார்கள் என 10-க்கும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் பாஜக எம்.எல்.ஏ. ஒருவரின் காரும் அடங்கும். இதையடுத்து ஆசிரியர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர்.
பிகார் சட்டப் பேரவை அமைந்துள்ள இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த சம்பவங்கள் அரங்கேறின.
"போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதலில் போலீஸாரை நோக்கி கற்களை வீசினர். இதையடுத்து அவர்களைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டது. அதே நேரத்தில் போலீஸ் ஜீப்புகளுக்கு தீ வைப்பது, வாகனங்களை கல்வீசி தாக்குவது என வன்முறையில் இறங்கினர். இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தடியடி நடத்தப்பட்டது' என்று நகர போலீஸ் கமிஷனர் ஜெயகாந்த் தெரிவித்தார். போராட்டத்தால் நகரின் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இப்பிரச்னையை சட்ட மேலவையில் எழுப்பியதால் அவை ஒருமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பணி நிரந்தரம், சம ஊதியம் கேட்டு ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகர் பாட்னாவில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 2 போலீஸ் ஜீப்புகள் எரிக்கப்பட்டன. பஸ்கள், கார்கள் என 10-க்கும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் பாஜக எம்.எல்.ஏ. ஒருவரின் காரும் அடங்கும். இதையடுத்து ஆசிரியர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர்.
பிகார் சட்டப் பேரவை அமைந்துள்ள இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த சம்பவங்கள் அரங்கேறின.
"போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதலில் போலீஸாரை நோக்கி கற்களை வீசினர். இதையடுத்து அவர்களைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டது. அதே நேரத்தில் போலீஸ் ஜீப்புகளுக்கு தீ வைப்பது, வாகனங்களை கல்வீசி தாக்குவது என வன்முறையில் இறங்கினர். இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தடியடி நடத்தப்பட்டது' என்று நகர போலீஸ் கமிஷனர் ஜெயகாந்த் தெரிவித்தார். போராட்டத்தால் நகரின் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இப்பிரச்னையை சட்ட மேலவையில் எழுப்பியதால் அவை ஒருமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பணி நிரந்தரம், சம ஊதியம் கேட்டு ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment