Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, March 17, 2013

    ராணுவ பணி கிடைப்பதோடு, நாட்டுக்கு சேவை செய்யவும் முடியும்: மதுரை ஆட்சியர்

    ராணுவத்தில் பணி கிடைக்கிறது என்று சொல்வதை விட, நாட்டுக்கு சேவை செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கிறது என்று சொல்லலாம் என, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.
    மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த, ராணுவத்தில் பங்கேற்க விரும்பும் மதுரை மாவட்ட இளைஞர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:

    மே 6 - 12 வரை, 11 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தேர்வு முகாம், ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. மதுரை மாவட்ட இளைஞர்கள் அதிகளவில் வரவேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதற்கான உடற்தகுதியை வளர்த்துக் கொள்வதற்காக, 15 நாட்கள் சிறப்பு முகாம் மைதானத்தில் இலவசமாக நடத்தப்படுகிறது. தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். இளைஞர்கள் தேர்வானால் உங்களுக்கு பணி மட்டும் கிடைப்பதில்லை. நாட்டுக்கு சேவை செய்யும் நல்ல வாய்ப்பும் கிடைக்கிறது, என்றார்.

    ராணுவ மருத்துவ தேர்வு அலுவலர் ராகுல் கூறியதாவது: ஊட்டியில் நடந்த தேர்வில் முதற்கட்டமாக 450 பேர் தேர்வு பெற்றுள்ளனர். அடுத்து மதுரையில் நடைபெற உள்ளது. தேர்வில் முதலில் சரிபார்ப்பது இருப்பிடச் சான்றிதழைத் தான். வருவாய்த்துறை மூலமும், ராணுவம் மூலமும் சான்றிதழ் சரிபார்க்கப்படும். அதன்பின் உடற்தகுதித் தேர்வு நடத்தி, தேர்வு பெறுபவர்களுக்கு தனியாக பதிவெண் வழங்கப்படும். மீண்டும் மருத்துவத் தேர்வு, கடைசியாக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர், என்றார். கூடுதல் எஸ்.பி., மயில்வாகனன், ராணுவ உதவி தேர்வு அலுவலர் சுபாஷ் சந்த் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

    No comments: