சி.பி.எஸ்.இ வழங்குவது போலவே, குடும்பத்தின் ஒரே பெண் குழந்தை முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்க இந்திரா காந்தி உதவித் தொகைத் திட்டத்தின்கீழ் பல்கலைக் கழக மானியக் குழு கல்வி உதவித் தொகை வழங்குகிறது.
அதன்படி, குடும்பத்தின் ஒரே பெண் குழந்தையாக இருக்க வேண்டும். அந்தக் குடும்பத்தில் வேறு ஆண் குழந்தை இருந்தால் இந்த உதவித் தொகை கிடைக்காது. முதுநிலைப் பட்டப் படிப்பில் முதல் ஆண்டு படித்து வரும் மாணவிகள் இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
தொழிற் படிப்புகள் அல்லாத முதுநிலை பட்டப் படிப்புகளில் படிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவியின் வயது 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உதவித் தொகையினை பெற விரும்பும் மாணவிகள், பல்கலைக் கழக மானியக் குழுவின் www.ugc.ac.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் மாணவிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு பத்து மாதங்கள் உதவித் தொகை வழங்கப்படும். முதுநிலைப் பட்டப் படிப்புக்கான இரண்டு வருட காலத்திற்கும் இந்த உதவித் தொகையைப் பெறலாம். திறந்த நிலைப் பல்கலைக் கழகங்கள் மூலமோ, தொலை நிலைக் கல்வி மூலமோ பயிலும் மாணவிகள் இந்த உதவித் தொகையினைப் பெற முடியாது.
தொழிற் படிப்புகள் அல்லாத முதுநிலை பட்டப் படிப்புகளில் படிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவியின் வயது 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உதவித் தொகையினை பெற விரும்பும் மாணவிகள், பல்கலைக் கழக மானியக் குழுவின் www.ugc.ac.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் மாணவிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு பத்து மாதங்கள் உதவித் தொகை வழங்கப்படும். முதுநிலைப் பட்டப் படிப்புக்கான இரண்டு வருட காலத்திற்கும் இந்த உதவித் தொகையைப் பெறலாம். திறந்த நிலைப் பல்கலைக் கழகங்கள் மூலமோ, தொலை நிலைக் கல்வி மூலமோ பயிலும் மாணவிகள் இந்த உதவித் தொகையினைப் பெற முடியாது.
No comments:
Post a Comment