Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 4, 2013

    போதை ஆசிரியர்களை போலீசில் பிடித்து கொடுத்த பள்ளி மாணவர்கள்

    தாங்கள் பணியாற்றும் பிரபல பள்ளியில், தங்களின் குழந்தைகளுக்கு, அட்மிஷன் கிடைத்ததை, பள்ளியிலேயே மது அருந்தி ஆசிரியர்கள் கொண்டாடியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    மேற்குவங்கம், கூச் பிகாரில் உள்ளது, பிரபல ஜென்கின்ஸ் பள்ளி. இங்கு பணியாற்றும், மூன்று ஆசிரியர்கள், அதே பள்ளியில், தங்களின் குழந்தைகளுக்கு, அட்மிஷன் பெற முயற்சி மேற்கொண்டனர். இதில், அவர்களுக்கு வெற்றி கிடைத்தது.

    இந்த மகிழ்ச்சியை, சக ஆசிரியர்கள் சிலர் மற்றும் பள்ளி ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டாட தீர்மானித்தனர். அதற்கேற்ற வகையில், பிஜன் சாகா என்ற ஆசிரியர் பள்ளியிலேயே, மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார். நேற்று முன்தினம் இரவு, இந்த மது விருந்து நடந்தது.

    இதையறிந்த, பள்ளி மாணவர்கள், போலீசில் புகார் செய்தனர்; குடிபோதையில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அத்துடன், மது விருந்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று கூச்பிகார் நகரில், பேரணியும் நடத்தினர். இந்த சம்பவம், மேற்கு வங்க மாநிலத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments: