Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, March 6, 2013

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜர் - நாளிதழ் செய்தி

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தற்காலிகமாக பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் மட்டும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
    இதனால் அரியலூரைச் சேர்ந்த வேதவல்லி உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.ஆனால் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை செயலளார் சபீதா மீது சென்னை உயர் நீதிமன்றத்தில்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி என். பால்வசந்தகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையொட்டி பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா  உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். 2 வாரத்துக்குள் உஅர் நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதாக உறுதி அளித்தார். இதையடுத்து இந்த வழக்கை 2 வாரம் தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    No comments: