Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, March 20, 2013

    பிட் அடித்த மாணவர்களின் பெற்றோர் அதிரடி கைது

    10ம் வகுப்பு தேர்வில், "பிட்" அடித்த, 1,600 மாணவர்கள், கையும், களவுமாக பிடிபட்டனர். இவர்கள், தேர்வெழுத தடை விதிக்கப்பட்டதோடு, "பிட்" அடிப்பதற்கு உதவியதாக, மாணவர்களின் பெற்றோர், 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பீகார் மாநில, பள்ளி கல்வி வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பீகார் மாநிலத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடந்து வருகின்றன. இதில், அதிகமான மாணவர்கள், "பிட்" அடிப்பதாக, புகார் எழுந்தது.

    இதையடுத்து, "பிட்" மாணவர்களை பிடிப்பதற்காக, அதிரடிப்படை அமைக்கப்பட்டது.அதிரடிப் படையினர், கடந்த சில நாட்களாக, தேர்வு மையங்களில் அதிரடிச் சோதனை நடத்தினர். இதில், "பிட்" அடித்த, 1,600 மாணவர்கள், சிக்கினர். இவர்கள், தொடர்ந்து தேர்வு எழுத, தடை விதிக்கப்பட்டது.

    மாணவர்கள், "பிட்" அடிக்க உதவியதாக, அவர்களின் பெற்றோர், 100 பேர், கைது செய்யப்பட்டனர். பாட்னா உட்பட, மேலும் மூன்று மாவட்டங்களில் தான், அதிகமான முறைகேடுகள் நடந்தன. இதையடுத்து, அங்கு கண்காணிப்பும், சோதனையும், அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

    No comments: