Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, March 2, 2013

    தமிழ் முதல் தாள் மிக எளிது: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

    பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது என, மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும், அரையாண்டு தேர்வில் தமிழ் முதல்தாள் கேள்வித்தாளில் இடம்பெற்றிருந்த
    29 மதிப்பெண்களுக்கான 8 கேள்விகள், நேற்று நடந்த பொதுத்தேர்வில் வரிசை எண் மாறாமல் இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. முதல் தேர்வாக தமிழ் முதல் தாளில் இடம் பெற்ற வினாக்கள், பெரும்பாலும் கடந்தாண்டில் கேட்கப்பட்டவையாக இருந்தன. இலக்கணம், மனப்பாடப் பகுதிகள் எளிமையாக இருந்ததால், சாதாரணமாக படிக்கும் மாணவர்கள்கூட 70 மதிப்பெண்களை எட்டிவிட முடியும்.

    மாணவர்கள் குஷி: பிளஸ் 2 அரையாண்டு தேர்வில் தமிழ் முதல்தாள் கேள்வித்தாளில் இடம்பெற்றிருந்த 29 மார்க்கிற்கான எட்டு கேள்விகள், நேற்று நடந்த பொதுத்தேர்வில் வரிசை எண் மாறாமல் இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இரண்டு தேர்வுகளிலும் வரிசை எண் மாறாமல் கேட்கப்பட்ட கேள்விகள்:

    எண் 1: நாடோறும் எதனைப்பாடுதல் வேண்டும், என நாமக்கல் கவிஞர் கூறுகிறார் (2 மார்க்).

    எண் 7: வரத நஞ்சப்பபிள்ளை எக்காரணங்களால் தமிழன்னையை வாழ்த்துவம் என கூறுகின்றார்(4 மார்க்) . எண் 12: ராஜராஜ சோழனின் வில், வாள், முரசு, கொடி குறித்து கூறப்பட்டன யாவை(4 மார்க்).

    எண் 19: குழந்தைத்தொழிலாளர் அவலநிலையைக் கவிஞர் அப்துல் ரகுமான் கூறுமாறு தொகுத்து வரைக(8 மார்க்).

    எண் 27: பொருண் மொழி காஞ்சித்துறை(4 மார்க்). எண் 28: ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து- குறட்பா அணியை விளக்குக(4 மார்க்),

    எண் 48: சுந்தரர் தேவாரம்(மூன்றில் சரியானதை தேர்வு செய்வது, ஒரு மார்க்), எண் 50: கோடிட்ட இடங்களை நிரப்பும் கேள்வியில் எந்நன்றி..... உய்வுண்டாம் உய்வில்லை; செய்ந்நன்றி மகற்கு(2 மார்க்).

    No comments: