Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, March 7, 2013

    45 ஆசிரியர்களுக்கு ‘17ஏ‘ நோட்டீஸ் கல்வி அலுவலகம் முற்றுகை

    ஆசிரியர்களுக்கு ‘17ஏ‘ நோட்டீஸ் வழங்கப்பட்டதை கண்டித்து, கோவை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் நேற்று இரவு முற்றுகையிட்டனர­்.
    கோவை மாவட்டத்தில் அரசு துவக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கணேசமூர்த்தி ஆய்வு நடத்தி வருகிறார். ஆய்வை தொடர்ந்து 45 ஆசிரியர்களுக்கு நடவடிக்கை நோட்டீஸ் (17ஏ) வழங்கப்பட்டது. இதை கண்டித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தை தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் மணிகண்டன், செயலாளர் ஆனந்தராமன், பொருளாளர் கருப்புசாமி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் நேற்றிரவு முற்றுகையிட்டனர்.
    ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு நலத்திட்ட பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதால், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து வருகிறது. தொடக்க கல்வி அலுவலர் பள்ளிகளில் ஆய்வு நடத்தினார். மாணவர்களின் கட்டுரை நோட்டுகளில் உள்ள பிழைகளை ஆசிரியர்கள் சரியாக திருத்தவில்லை எனக்கூறி ஆசிரியர்களுக்கு ‘17ஏ‘ நோட்டீஸ் வழங்கினர். இதனால், ஊதிய உயர்வு பாதிக்கப்படும். இதுவரை இதுபோன்ற காரணங்களுக்கு ‘17ஏ‘ நோட்டீஸ் வழங்கப்படவில்லை. நோட்டீசை திரும்ப பெறவேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கூறுகையில் ‘நடவடிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டதில் விதிமுறை மீறல் கிடையாது. தவறு செய்தவர்கள் மீது நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. இந்த நோட்டீஸ் திரும்ப பெறமாட்டாது என்றார்.

    No comments: