Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, March 13, 2013

    3 நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் நெல்லையில் 15ம் தேதி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நெல்லையில் வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் பாளையில் நடந்தது.
    மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சுடலைமணி வரவேற்றார். மாநில செயலாளர்கள் முருகேசன், மணிமேகலை சிறப்புரை ஆற்றினர்.6வது ஊதிய குழு முரண்பாடுகளை களையும் 3 நபர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.தேர்தல் வாக்குறுதியின்படி தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட தொகையை 50 ரூபாயாக குறைக்க வேண்டும்.இக்கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி மாலையில் நெல்லை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தானந்தம் தேவதாஸ், முருகையா, மாவட்ட துணைத் தலைவர் பரமசிவன், நிர்வாகிகள் ஈஸ்வரன், முத்துசாமி, ஜெயசங்கர், மணிமேகலை, பால்ராஜ், பால் ராபர்ட், சுசிகர் சவுந்திரராஜன், ராஜ்குமார், கென்னடி, சுரேஷ் முத்துக்குமார், பவுல், காமராஜ், துரைராஜ், ஜெயக்குமார், அருள் மரியஜான்,அல்போன்ஸ், பிரம்மநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    No comments: