Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, March 6, 2013

    ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஒரே மாதத்தில் 2 முறை சம்பளம்

    தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர்கள், காவல்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் என அரசு ஊழியர்கள் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பள பட்டுவாடா நடக்கிறது. பிப்ரவரி மாத சம்பளம் கடந்த 28ம் தேதி மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களில் 70 சதவீதம் பேருக்கு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
    இந்நிலையில், மார்ச் 1ம் தேதி மீண்டும் பிப்ரவரி மாத சம்பளம் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. சில 2 சம்பளத்தையும் எடுத்து செலவு செய்தனர். இது பற்றி அறிந்த அதிகாரிகள் கருவூல கணக்குகளை சரி பார்த்தனர். இதில், முறையாக வங்கிக்கு கணக்கு கொடுத்திருப்பது தெரியவந்தது. ஆனால், வங்கி ஊழியர்கள் தவறுதலாக 2 முறை அப்லோடு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக இரண்டாவது சம்பளத்தை திரும்ப பெறும் பணியில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த குளறுபடியால் மீதமுள்ள 30 சதவீதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், 2வது சம்பள பணத்தை எடுத்து செலவு செய்தவர்களிடம் உரிய தொகையை வசூலிக்கவும், இதுவரை எடுக்காதவர்களின் இரண் டாவது சம்பள பணத்தை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

    No comments: