Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, March 2, 2013

    11 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டணம்

    வரும் மே மாதத்துடன், பழைய கல்வி கட்டணம் முடிவுக்கு வரும் நிலையில், 11,626 தனியார் பள்ளிகளுக்கு, ஆகஸ்ட் 26ம் தேதிக்குள், அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும் என, கட்டண நிர்ணயக் குழு தலைவர் சிங்காரவேலு தெரிவித்தார்.
    அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கட்டண நிர்ணயக் குழுவின் முதல் தலைவர், கோவிந்தராஜன் நிர்ணயித்த, கட்டண காலக்கெடு, 11,626 பள்ளிகளுக்கு, வரும் மே மாதத்துடன் முடிகிறது. இதனால், அந்த பள்ளிகளுக்கு, அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கும் சேர்த்து, புதிய கட்டணங்களை நிர்ணயிக்க, நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    முதலில், கட்டண நிர்ணயிப்பில் இருந்து விடுபட்ட, 910 பள்ளிகளுக்கு, கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, விசாரணை துவங்கி உள்ளது. தினமும், 100 பள்ளிகளிடம் விசாரணை நடக்கும். இந்த விசாரணை, மூன்று வாரங்களுக்கு நடக்கும். அதன் பின், 11 ஆயிரம் பள்ளிகள் மீதான விசாரணை நடக்கும்.

    அனைத்துப் பள்ளிகளுக்கும், ஆகஸ்ட் 26ம் தேதிக்குள், புதிய கட்டணங்களை நிர்ணயித்து விடுவோம். பள்ளிகளுக்கு, 7 முதல், 10 சதவீதம் வரை, கட்டணங்களை உயர்த்தலாம் என, சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது. இதற்கு, ஒரு மதிப்பீட்டை தயாரித்து,
    அதனடிப்படையில், கட்டணங்களை உயர்த்தலாம் எனவும், ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

    எனவே, பள்ளிகளின் ஒட்டு மொத்த தரத்தின் அடிப்படையில், கிரேடு வகைப்படுத்தி, கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு சிங்காரவேலு கூறினார்.

    No comments: