தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் -1 தேர்வுக்கான வயது வரம்பை, 45 ஆக உயர்த்த வேண்டும்" என, மார்க்., கம்யூ., கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து, கட்சியின் மாநில செயலர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: குரூப் -1 தேர்வு எழுத பொதுப் பிரிவினருக்கு 30 என்றும், இதர பிரிவினருக்கு 35 எனவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குரூப் -1 தேர்வு ஆண்டுதோறும் நடைபெறுவதில்லை. இதனால், முதல்முறை தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் தேர்வு எழுத வயது வரம்பு தடையாக அமைகிறது. கேரளா, குஜராத், அசாம், திரிபுரா, அரியான மாநிலங்களில், குரூப் -1 தேர்வுக்கான வயது வரம்பை, 40 முதல், 50 வயதாக நிர்ணயித்துள்ளனர்.
எனவே, பின்தங்கிய பகுதியிலிருந்து போட்டியிடும் இளைஞர்களின் நலன் கருதி, குரூப் -1 தேர்வுக்கான வயது வரம்பை, 45 ஆக உயர்த்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ராமகிருஷ்ணன் கூறியள்ளார்.
குரூப் -1 தேர்வு ஆண்டுதோறும் நடைபெறுவதில்லை. இதனால், முதல்முறை தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் தேர்வு எழுத வயது வரம்பு தடையாக அமைகிறது. கேரளா, குஜராத், அசாம், திரிபுரா, அரியான மாநிலங்களில், குரூப் -1 தேர்வுக்கான வயது வரம்பை, 40 முதல், 50 வயதாக நிர்ணயித்துள்ளனர்.
எனவே, பின்தங்கிய பகுதியிலிருந்து போட்டியிடும் இளைஞர்களின் நலன் கருதி, குரூப் -1 தேர்வுக்கான வயது வரம்பை, 45 ஆக உயர்த்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ராமகிருஷ்ணன் கூறியள்ளார்.
No comments:
Post a Comment