Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, February 7, 2017

    செல்போன் தொடர்பான சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்: உச்சநீதிமன்றம்

    செல்போன் தொடர்பான சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓர் ஆண்டுக்குள் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிம் கார்டு முறைகேடுகளை தடுக்க புதிய கட்டுப்பாடுகள், வழிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


    வங்கி நடைமுறைகள் தற்போது செல்போன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதால், செல்போன் பயன்பாட்டை கண்காணிப்பது மிகவும் அவசியம். இதனால் செல்போன் வைத்திருப்போர் அனைவரிடமும் ஆதார் எண்ணையும், கே.ஒய்.சி. படிவத்தை ஓராண்டுக்குள் பெறப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ப்ரீபெய்டு மொபைல் போன்கள் விஷயத்தில் கட்டாயம், அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட வேண்டும். கிரிமினல், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இந்த நம்பர்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கவே கண்டிப்பான இந்த உத்தரவு என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேகார், படிப்படியாக இதை நடைமுறைப்படுத்தலாம். ரீசார்ஜ் வசதியை அவர்களுக்கு வழங்காமல் 6 மாத காலத்தில் அவர்கள் பற்றிய முழு விவரத்தையும் தீர விசாரித்தறியலாம் என்று கூறினார்.

    சிம் கார்டு பெறுபவர்கள் யார் எங்கிருப்பவர்கள் என்ற விவரங்கள் எதுவும் முறைப்படி விசாரணை இல்லாம் நாட்டில் சுமார் 5 கோடி ப்ரீபெய்டு சந்தாராரர்கள் இருக்கிறார்கள் என்று லோக் நிதி பவுண்டேஷன் என்னும் அமைப்பு தொடர்ந்த ஒரு பொது நல வழக்கையடுத்து உச்சநீதிமன்ற அமர்வு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

    No comments: