Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, February 10, 2017

    டி.ஆர்.பி தலைவர் திடீர் மாற்றம்


    ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்தில் ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக கடந்த  3 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரி விபு நய்யார் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    இதையடுத்து ஏப்ரல் 29, 30ம் தேதிகளில் தகுதித் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு  வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள் முடிந்து தற்போது விண்ணப்ப படிவங்கள் வினியோகம் தொடங்க உள்ளது. தேர்வு நடத்துவது ெதாடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபு நய்யாருக்கும், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


    இதனால், தகுதித் தேர்வு அட்டவணை வெளியிடுவதை விபுநய்யார் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதையடுத்து, விபுநய்யாரை டான்சிக்கு மாற்றி அரசு  நேற்று உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக உள்ளாட்சி நிர்வாகத்துறையின் பொறுப்பு அதிகாரியாக உள்ள காகர்லா உஷா ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று மாலை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், உள்ளாட்சித் துறையுடன் தொழில் துறையின் பொறுப்பை கவனித்து வந்தார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்புடன் சேர்த்து 3 துறைகளை இனி கவனிப்பார்

    No comments: