Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, December 10, 2015

    தென் மாவட்டங்களில் இன்று கன மழை

    வங்க கடலின், தென் மேற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த, காற்று அழுத்த தாழ்வு நிலை, குமரி கடலை நோக்கி நகர்ந்து உள்ளதால், தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


    இதுகுறித்து, ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், நேற்று கூறியதாவது:இரு நாட்களுக்கு முன், வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான, காற்று அழுத்த தாழ்வு நிலை, நேற்று காலை நிலவரப்படி, குமரி கடலை நோக்கி நகர்ந்து உள்ளது.இதனால், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் கடலுாரில், இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்பு இல்லை.சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில், விட்டு விட்டு மழை பெய்யலாம். கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
    நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, நாகபட்டினம் மாவட்டம், வேதாரண்யம் - 22; தஞ்சை மாவட்டம், மதுக்கூர் - 9; நெல்லை மாவட்டம், பாபநாசம் - 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    No comments: