Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, December 31, 2015

    பெண்கள் விடுதி காப்பாளர் நியமனம் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

    பெண்கள் விடுதிகளுக்கு பெண்களை மட்டுமே பாதுகாப்பாளராக நியமிக்க வேண்டும்,'' என, விளையாட்டுத் துறை அமைச்சர் சுந்தர்ராஜ் கூறியுள்ளார்.
    இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அலுவலர் கூட்டம், அமைச்சர் சுந்தர்ராஜ் தலைமையில், சென்னை, நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில், மாநிலம் முழுவதும் உள்ள விளையாட்டு அலுவலர்கள், விளையாட்டு விடுதி மேலாளர்கள் கலந்து கொண்டனர். 


    சட்டசபையில், 110வது விதியின் கீழ் வௌியான அறிவிப்புகளின் செயல்பாடு, தற்போதைய மேம்பாடு, விளையாட்டு உள்கட்டமைப்பு வசதி முன்னேற்றம், விளையாட்டு விடுதிகளின் செயல்பாடு, உலக திறனாய்வு திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    அமைச்சர் சுந்தர்ராஜ் பேசியதாவது:அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் காலம் தாழ்த்த கூடாது. பெண்கள் விடுதிக்கு பெண்களை தான் காப்பாளராக நியமிக்க வேண்டும். விளையாட்டு பள்ளிகளை அதிகளவில் உருவாக்க வேண்டும். விளையாட்டு வளாகங்களில் நேரில் ஆய்வு செய்து, குறைபாடுகளை சுட்டிக்காட்டியும் சரி செய்யாத விளையாட்டு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாதந்தோறும் மாவட்டங்களில் குழுக்கூட்டம் நடத்த வேண்டும்.
    விளையாட்டுத்துறையை மேம்படுத்த பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. எனவே, விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் தனித்திறனை கண்டறிந்து, தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் சிறப்பான பயிற்சி அளிக்க வேண்டும்.

    No comments: