Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, October 17, 2015

    ஆசிரியர்களுக்கு ஓர் ஆறுதல் செய்தி; மிஸ்டர் கழுகு:ஜூனியர் விகடன்

    ‘‘ஆசிரியர்கள் போராட்டம் ஆட்சிக்கு பெரிய சிக்கலை உருவாக்கிவிட்டதாமே?” ‘‘ஆசிரியர் சங்கங்களின் கூட்டு குழுவான ஜாக்டோ அமைப்பு கடந்த 8ம் தேதி தமிழகத்தில் பள்ளிகளில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது.
    ஆசிரியர்கள்
    மற்றும் அரசு ஊழியர்களின்
    முக்கியமான கோரிக்கை 6-வது ஊதிய
    ஊயர்வு கமிஷன் நிர்ணயித்த சம்பள
    விகிதங்களில் உள்ள குளறுபடிகளை
    நீக்க வேண்டும் என்பது. இதை வைத்து
    ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள்
    நீண்ட நாள் போராட்டங்கள் நடத்தி வந்தன.
    ஆசிரியர் சங்கங்களின் இந்தப் போராட்டம்
    சட்டசபை தேர்தலில் பெரிய அளவில்
    பாதிப்பை ஏற்படுத்தும் என்று உளவுத்
    துறையினர் ஆளும் கட்சி மேலிடத்தின்
    கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
    இதையடுத்து தலைமைச்செயலகத்தில்
    அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன்
    தலைமையில் தலைமைச்செயலாளர்,
    நிதித்துறை செயலாளர்,
    பொதுத்துறை செயலாளர் ஆகியோர்
    கூடிய அவசர கூட்டம் நடந்தது.
    இதையடுத்து நிதித் துறை
    செயலாளர் சண்முகம் அனைத்து துறை
    முதன்மைச் செயலாளர்களுக்கும் ஓர்
    உத்தரவை அவசர அவசரமாக அனுப்பி
    வைத்தார். அதில் 6-வது
    ஊதியக்குழுவில் என்னென்ன
    முரண்பாடுகள் இருக்கின்றன. அதை
    எப்படி தீர்ப்பது என்று அறிக்கை
    அளிக்கும்படி அந்த உத்தரவில்
    கூறப்பட்டிருந்தது. விரைவில்
    ஆசிரியர்கள் பிரச்னை தீரலாம்!”

    No comments: