Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, October 27, 2015

    110வது விதியில் அறிவித்த பாடப்பிரிவுகளுக்கு பேராசிரியர் இல்லை

    சட்டசபையில், 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட, 959 புதிய பாடப்பிரிவுகளுக்கு, அரசு கல்லுாரிகளில் பேராசிரியர்கள் இல்லை; இதனால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழக அரசு கட்டுப்பாட்டில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 1,000 பாடப்பிரிவுகள்; 8,000 பேராசிரியர்கள் உள்ளனர். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு தேவைக்கேற்ப, புதிய பாடப்பிரிவுகளை துவக்க, பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.


    இதையடுத்து, நான்கு ஆண்டுகளில், சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வரால், 959 பாடப்பிரிவுகள் புதிதாக அறிவிக்கப்பட்டன. இவற்றில், எம்.பில்., மற்றும் பிஎச்.டி.,யில், 300 பாடப்பிரிவுகளும் அடங்கும். ஆனால், புதிய பாடப்பிரிவுகளுக்கு தனியாக பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை; கூடுதல் வகுப்பறைகளும் இல்லை. கல்லுாரிகளில், ஏற்கனவே உள்ள வகுப்பறையை பிரித்து, கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், புதிய பாடப்பிரிவுக்கான வகுப்பறைகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து, கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது: புதிய பாடப்பிரிவுகளில், இளங்கலைக்கு, ஆண்டுக்கு இரண்டு பேராசிரியர் என, மூன்று ஆண்டுகளுக்கு, ஆறு பேர்; முதுகலைக்கு, ஆண்டுக்கு இரண்டு பேர் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு நான்கு பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அப்படி நியமிக்காததால், புதிய பாடப்பிரிவுகளில் சேர்ந்த மாணவர்கள், வேறு பாடப்பிரிவுகளுக்கு மாறும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு, விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    COURTESY : DINAMALAR

    No comments: