Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, October 30, 2015

    நாக் அங்கீகாரம் பெற குறுக்கு வழி; கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

    மத்திய அரசின் தேசிய அளவீடு மற்றும் ஆய்வுக் குழுவான, நாக் அங்கீகாரம் பெற, ஏஜன்டுகளை அணுக வேண்டாம் என, கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    பல்கலை மற்றும் கல்லுாரி களை கட்டுப்படுத்தும், பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி.,யின், 2012ம் ஆண்டு வழிகாட்டு விதிகளின்படி, கல்லுாரிகள் நிதியுதவி பெற, பல நிபந்தனைகள் வகுக்கப்பட்டு உள்ளன. அதன்படி, கல்லுாரிகள், நாக் நிறுவன தர அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். 

    கல்லுாரிகளை ஆய்வு செய்து, ஏ, பி, என, பல கிரேடுகளில், தர அங்கீகாரம் வழங்கப்படுகிறது. யு.ஜி.சி., மானியம் பெற, 2015 டிசம்பருக்குள், கட்டாயம் நாக் அங்கீகாரம் பெற வேண்டியது அவசியம். அதனால், பல பல்கலைகளும், கல்லுாரிகளும், இடைத்தரகர்கள், ஏஜன்சிகளைப் பிடித்து, குறுக்கு வழியில் முயற்சிக்கின்றன. இந்நிலையில், அனைத்து கல்லுாரிகளுக்கும், மத்திய அரசு சார்பில், எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

    நாக் அங்கீகாரம் பெற, பல சட்ட விதிமுறைகள் உள்ளன. நாக் நிபுணர் குழு, நேரடி ஆய்வு செய்து, தகுதி இருந்தால் மட்டுமே அங்கீகாரம் வழங்கும்.சமீப காலமாக, நாக் அங்கீகாரம் பெறுவது எப்படி; அதற்கு அறிக்கை தயார் செய்வது எப்படி; யாரை அணுக வேண்டும் என, பயிற்சி கருத்தரங்குகளை, சில நிறுவனங்கள் நடத்துகின்றன. கல்லுாரிகள், அந்த நிறுவனங்களை அணுகுவதாக, புகார்கள் வந்துள்ளன.

    நாக் அங்கீகாரம் வழங்க, எந்தவித ஏஜன்சியோ, இடைத்தரகர்களோ நியமிக்கப்படவில்லை. எனவே, கல்லுாரிகள் இடைத்தரகர்களை அணுகுவதை தவிர்க்க வேண்டும். அந்த நிறுவனங்களால், அங்கீகாரம் பெற்றுத்தர முடியாது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    No comments: