Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, October 27, 2015

    நேரடி பணி நியமனத்தில் குளறுபடி

    அரசுத்துறைகளில் நேரடி பணி நியமனத்தில் குளறுபடிகள் நடப்பதாக வேலைவாய்ப்புத்துறை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வரையறைக்கு உட்பட்டதை தவிர மற்ற பணியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட்டன. நீதிமன்ற உத்தரவால், சமீபகாலமாக அந்தந்த அரசு துறைகள் மூலமே காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 

    விண்ணப்பத்தின் அடிப்படையில் நேர்முகத்தேர்வு நடத்தி பணியாளர்களை நியமிக்கின்றனர். இதில், 'வேலைவாய்ப்பக பதிவுதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என அரசு உத்தரவிட்டுள்ளது. 'இதை துறை அலுவலர்கள் முறையாக பின்பற்றுவதில்லை' என வேலைவாய்ப்புத்துறையினர் புகார் தெரிவிக்கின்றனர்.
    தமிழ்நாடு வேலைவாய்ப்புத்துறை ஊழியர் சங்க மாநிலத்தலைவர் கணேசமூர்த்தி கூறியதாவது: எங்களிடம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு பட்டியல் பெறப்பட்டாலும், முறையாக பணிநியமனம் செய்வதில்லை. இனசுழற்சி முறையும் பின்பற்றுவதில்லை. இதேநிலை நீடித்தால் இளைஞர்களிடையே, வேலைவாய்ப்பு அலுவலகம் குறித்த நம்பிக்கை போய்விடும். 
    இதை கண்டித்து அக்., 28ல் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். தொடர்ந்து சென்னையில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த உள்ளோம், என்றார்.

    No comments: