அரசு சட்டக் கல்லுாரிகளில், அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டப் பிரிவு பேராசிரியர்களின் தேர்வுப் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு சட்டக் கல்லுாரிகளில், பல்வேறு பாடப்பிரிவுகளில், 50 விரிவுரையாளர் காலியிடங்களை நிரப்ப, 2014 ஜூலையில், ஆசிரியர் தேர்வு வாரியமான - டி.ஆர்.பி., மூலம் எழுத்துத் தேர்வு நடந்தது.
இதில் தேர்வானோர் பட்டியல், மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டப்பிரிவுக்கான அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட பிரிவுக்கான தேர்வு மற்றும் நிராகரிப்பு பட்டியலை, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன் விவரங்களை, http:/trb.tn.nic.in/ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment