Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, September 11, 2015

    பள்ளி மாணவர்களிடம் வசூல்; பட்டதாரி ஆசிரியர் சஸ்பெண்ட்

    வெள்ளக்கோவில் அரசு பள்ளியில், மாணவர்களிடம் முறைகேடாக, இரண்டு லட்சம் ரூபாய் வரை வசூலித்த, பட்டதாரி ஆசிரியர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,050 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் முருகேசன், மாணவர் சேர்க்கையின்போதும், இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கியபோதும், பல்வேறு காரணங்களை கூறி, மாணவ, மாணவியரிடம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதற்கு, அதே பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். 


    கடந்த, 2012 முதல், வங்கியில் மூன்று பேரும் கணக்கு துவங்கி, முறைகேடாக வசூலித்த பணத்தை சேமித்துள்ளனர்.இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் முருகனுக்கு புகார் வந்தது. நேரில் சென்று விசாரணை நடத்தியபோது, ஆசிரியர்களின் வங்கி கணக்கில் முறைகேடாக வசூலித்த வகையில், இரண்டு லட்சம் ரூபாய் வரை இருப்பது தெரிய வந்தது.

    மற்ற இரு ஆசிரியர்களும், தங்களது தவறை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. குற்றச்சாட்டை மறுத்த முருகேசனை, சஸ்பெண்ட் செய்து, முருகன் உத்தரவிட்டார்.

    No comments: