Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, September 15, 2015

    மாணவி ஒருவர்; ஆசிரியை இருவர்:அரசு ஆரம்ப பள்ளியில் அதிசயம்

    திண்டுக்கல் மாவட் டம், அய்யம்பாளையத்தில், ஒரு மாணவி படிக்கும் அரசு ஆரம்ப பள்ளியில், இரு ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். அய்யம்பாளையம், சந்தைப்பேட்டை பகுதிகளில், மூன்று அரசு ஆரம்ப பள்ளிகளும், ஒரு அரசு உதவிபெறும் ஆரம்ப பள்ளியும் செயல்படுகின்றன. சந்தைப்பேட் டை பள்ளியில், தலைமை ஆசிரியையாக, பரமேஸ்வரியும், உதவி ஆசிரியையாக, மகாராணியும் பணிபுரிகின்றனர். 

    ஆனால், இப்பள்ளியில் இரண்டு ஆண்டுகளாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து, தற்போது, சத்தியப் பிரியா என்ற ஒரே ஒரு மாணவி மட்டும், மூன்றாம் வகுப்பு படிக்கிறார். இவரும், தலைமை ஆசிரியையின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு உணவு வழங்க, சமையல் உதவியாளரும் உள்ளார்.

    தலைமை ஆசிரியை, பரமேஸ்வரி கூறியதாவது:உதவி ஆசிரியை, நீண்ட நாட்களாக டெபுடேஷனில், வேறொரு பள்ளிக்கு செல்கிறார். கடந்த ஆண்டு வரை, 21 மாணவர்கள் படித்தனர். இந்த ஆண்டு, ஆறு பேர் அனுமதிக்கப்பட்டு, கடைசியில் என் மகள் மட்டுமே உள்ளார். கல்வியாண்டு துவக்கத்தில், அதிகாரிகள் பார்வையிட்டு, அரசுக்கு கடிதம் அனுப்பினர்.இவ்வாறு அவர் கூறினார்.

    அரசு பள்ளிகளில், குறிப்பாக ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, 'மளமள'வென சரிந்து வருகிறது என, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதை ஊர்ஜிதம் செய்யும் வகையில், பல ஆரம்ப பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தில் இருக்கிறது. 

    No comments: