Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, September 15, 2015

    மாணவர்களுக்கு சிறப்பு கவுன்சிலிங்

    பள்ளிக்கல்வித் துறையின் கீழ், பிரச்னைக்குரிய மாணவர்களுக்கு நடமாடும் உளவியல் மையம் வாயிலாக, சிறப்பு கவுன்சிலிங் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், பல்வேறு காரணங்களால் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி, உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க, மூன்று கோடி ரூபாய் மதிப்பில், 10 நடமாடும் ஆலோசனை மையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளது.
    ஆனால், பள்ளி மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால், 10 உளவியல் நிபுணர்களால் அனைத்து மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், உளவியல் நிபுணர்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, ஆசிரியர்களின் உதவியோடு பிரச்னைக்குரிய மாணவர்களை எளிதாக கண்டறிந்து கவுன்சிலிங் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு மனநலம் மற்றும் மாணவர்களை கையாளும் விதம் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் செயல்பாடுகள், பிரச்னைக்குரிய மாணவர்களை கண்டறிதல், அவர்களின் மாறுபட்ட செயல்பாடுகள் போன்றவை குறித்து பயிற்சிகளின் போது தெளிவுபடுத்தப்பட்டது.

    இதன் விளைவாக, பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிப்பதுடன் பிரச்னைக்குரிய மாணவர்கள் குறித்த விபரங்கள் அந்தந்த மண்டல உளவியல் நிபுணர்களிடம் தெரிவிக்கின்றனர். அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. கோவை மண்டல உளவியல் நிபுணர் அருள்வடிவு கூறுகையில்,  பிரச்னைக்குரிய மாணவர்கள் எளிதாக அடையாளம் காணப்படுவதால் உடனடியாக கவுன்சிலிங் வழங்கமுடிகிறது, என்றார்.

    No comments: