Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 14, 2015

    சட்டப் படிப்பு கலந்தாய்வு நிறைவு: 300-க்கும் மேற்பட்ட இடங்கள் காலி

    மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு நேற்று நிறைவுற்றது. தமிழகத்தில் உள்ள ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 1,252 இடங்களுக்காக நடைபெற்ற கலந்தாய்வில் 300க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு ஒரு வாரத் துக்குள் இரண்டாம் கட்ட கலந் தாய்வு நடைபெறும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.


    அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பட்டப்படிப்பில் 1,252 இடங்கள் உள்ளன. இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இந்த படிப்புக்கு தகுதியானவர்கள். இந்த இடங்களுக்கு சுமார் 7ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
    இவர்களுக்கு கடந்த புதன் கிழமை முதல் ஞாயிற்றுகிழமை வரை அடையாறில் உள்ள சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. கடைசி நாளான நேற்று 325 பேர் அழைக் கப்பட்டிருந்தனர். இதில் 250 பேர் பங்கேற்றனர் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    No comments: