Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 14, 2015

    சத்துணவு ஊழியர்கள் செப். 25ல் முதல்வர் சந்திப்பு பேரணி: மாநில நிர்வாகிகள் அறிவிப்பு

    பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்., 25ல் சென்னையில் சத்துணவு ஊழியர்கள் முதல்வர் சந்திப்பு பேரணி நடத்த உள்ளதாக மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி, பொதுச்செயலர் ராமநாதன், பொருளாளர் சுந்தரம்மாள் ஆகியோர் ராமநாதபுரத்தில் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள 42 ஆயிரம் சத்துணவு மையங்களில் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என 1.26 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 40 ஆயிரம் பணியிடங்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன. 


    1982ல் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் ஆகியும் இதுநாள் வரை நிரந்தரம் செய்யப்படவில்லை. கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அ.தி.மு.க. வாக்குறுதி அளித்தது. எங்களின் 34 அம்ச கோரிக்கைகளில் நிர்வாக ரீதியான 10 கோரிக்கைள் காலவரையற்ற போராட்ட அறிவிப்பால் ஏப்., 13ல் நடந்த சமரச பேச்சு வார்த்தையால் நிறைவேற்ற அரசாணை வெளியிடப்பட்டது.

    பிரதான கோரிக்கைகள் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும் நிறைவேற்றப்படும் என்ற உறுமொழி நிறைவேற்றப்படவில்லை.25 குழந்தைகள் கொண்ட 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட சத்துணவு மையங்களை மூடும் முடிவை அரசு விலக்கி கொள்ள வேண்டும்.

    ஓய்வூதிய பணக்கொடையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாதம் ரூ.3,500 ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பிரதான கோரிக்கைளை நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வரும் 18ல் ஆர்ப்பாட்டமும், செப்., 25ல் சென்னையில் 65 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்கும் முதல்வர் சந்திப்பு பேரணியும் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    No comments: