Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, September 1, 2015

    22 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி: அமைச்சர் தகவல்

    தமிழகத்தில் இதுவரை 22 லட்சத்து 19 ஆயிரத்து 866 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அவர் பேசியது:


    தமிழகத்தில் மிகச் சிறந்த திட்டமாக, விலையில்லாத மடிக்கணினிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதுவரை மொத்தம் 33 லட்சத்து 19 ஆயிரத்து 866 கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு, அதில், 22 லட்சத்து 19 ஆயிரத்து 866 வழங்கப்பட்டுள்ளன. மேலும், நான்கு, ஐந்தாம் கட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 லட்சம் மடிக்கணினிகள், டிசம்பருக்குள் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் முழுமையாக வழங்கப்படும்.
     தமிழகத்தில் இதுவரை மொத்தம் 10,034 இணைய சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம் 345, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் வழியாக 333, முதன்மை வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் 4,541, கிராமப்புற வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் 4,167, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் வழியாக 171, கிராமப்புற ஆர்வலர்கள் மூலம் 477 என மொத்தம் 10,034 இணைய சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
     சிறப்புப் பொருளாதார மண்டலம்: தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு 1,322.25 ஏக்கர் நிலம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. 
     கடந்த 2013-14 ஆண்டில் மொத்தமுள்ள எட்டு மண்டலங்களில் 32 தகவல் தொழில்நுட்பம்- அதுசார்ந்த நிறுவனங்களில், 38,000 பேர் நேரடியாகவும், 76,000 பேர் மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர். இப்போது அதன் எண்ணிக்கை 54 நிறுவனங்களாக அதிகரித்துள்ளது என்றார் சுப்பிரமணியன்.

    No comments: