Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, April 19, 2014

    தேர்தல் பணி முடிந்து நள்ளிரவு வீடு திரும்பும் பெண்களுக்கு வாகன வசதி

    தேர்தல் பணி முடிந்து நள்ளிரவு வீடு திரும்பும் அரசு ஊழியர்கள், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு வாகன வசதி செய்து தரவேண்டும்என தமிழக ஆசிரியர் கூட்டணி வேண்டு கோள் விடுத்துள்ளது. தமிழக ஆசிரியர் கூட்டணியின் நெல்லை மாவட்ட செயலாளர் சாம் மாணிக்கராஜ் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனு:

    முந்தைய தேர்தலைவிட இந்த தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் அதிகமாக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கான ஆயத்தப்பணி களை காலை 5.30 மணிக்கே தொடங்க வேண்டியுள்ளது. வாக்காளர்கள் அதிகம் உள்ள வாக்குசாவடிகளில் உணவு அருந்தக்கூட நேரம் இருப்பது இல்லை. போக்குவரத்து வசதியற்ற கிராமங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் இரவு நேரம் பயமின்றி வீடு திரும்ப வசதியாக வாகன வசதி செய்து தரப்பட வேண் டும்.
    வாக்குப்பதிவு இயந்திரங்களை சேகரிக்க வரும் அலுவலர்கள் கண்காணிப்பின்கீழ் இந்த வசதி செய்து தரப்பட வேண்டும். இதனால், பெண் ஆசிரியர்கள் தயக்கமின்றி இப் பணியை முன்வந்து செய்ய வசதியாக இருக்கும். தேசிய அளவில் ரூ.1400 கோடி அளவில் தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. எனவே, இந்த கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.
    மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் போன்ற பணிகளை வாக்குச்சாவடி அமைவிட அலுவலர்களாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகள் கடந்தும் மதிப்பூதியம் வழங்கவில்லை. ஏற்கனவே பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணம் வழங்கவில்லை. எனவே, அதை உடனே வழங்க ஆவண செய்ய வேண் டும்.
    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    No comments: